Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளூவேல் விபரீதம் ; ரஷ்யாவிலிருந்து பேசிய நபர்கள் ; விசாரணையில் திடுக் தகவல்

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (16:13 IST)
புதுவையில் புளூவேல் விளையாட்டை விளையாடி வந்த வங்கி ஊழியர் பிரியா சமீபத்தில் மீட்கப்பட்டார்.


 

 
புதுவையில் பிரியா என்ற 23 வயது பெண் வங்கி ஊழியர் புளூவேல் விளையாட்டிற்கு அடிமையாக மனச்சோர்வுடன் இருப்பதாக அவரது தோழி புதுவை போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து அவரை போலீசார் தேடி சென்றனர். அப்போது அவர் கடற்கரை அருகே நின்று கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து அவரை மீட்டனர். அதையடுத்து அவருக்கு மனநல ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
 
விசாரணையில் தினமும் இரவு 1 மணிக்கு மேல், தனியறையில் அவர் அந்த விளையாட்டை விளையாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விளையாட்டை ஆட தொடங்கியதிலிருந்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்துள்ளார். 
 
அவரது லேப்டாப்பை போலீசார் சோதனை செய்த போது, புளூவேல் விளையாட்டு பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதில், ஸ்கைப் மூலம் ரஷ்யாவிலிருந்து சிலர் அவரிடம் பேசி வந்துள்ளனர். அதேபோல், விபரீதமான கட்டளைகளைகள் மற்றும் மூளையை குழப்பும் வகையில் பல்வேறு தகவல்களையும் அவர்கள் பறிமாறி உள்ளனர்.
 
அந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, மத்திய உள்துறைக்கு புதுவை போலீசார் தகவல்களை அனுப்பியுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments