Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் முன்னேற்றத்திற்காகவே அரசு பாடுபடுகிறது: நரேந்திர மோடி

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (08:55 IST)
நாட்டை முன்னேற்றப்பாதையில் செலுத்தவே அரசு பாடுபடுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். விழா நிறைவடைந்த பின்பு உடனடியாக மத்யன்ஜல் பவனுக்கு சென்ற மோடி அங்கு நடைபெற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 
சுமார் 15 நிமிடம் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மத்தியில் மோடி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டை முன்னேற்றப்பாதையில் செலுத்தவே அரசு பாடுபடுகிறது. எங்களது முயற்சிக்கான பலனை விரைவில் காணலாம்" என்றார்.
 
மூன்று நாட்கள் நடைபெற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நேற்றோடு நிறைவடைந்தது.
 
இந்தக் கூட்டத்தில் பொருளாதாரம், கல்வி, தேசிய பாதுகாப்பு, உள்ளிட்டவைகளில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆலோசனை மற்றும் கருத்துக்களை பாஜக தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments