Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி ஊழியர்களைக் கொன்று ரூ.11 லட்சம் கொள்ளை - கொள்ளையர்கள் அட்டூழியம்

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (12:53 IST)
டெல்லியில் ஏடிஎம்மில் பணம் நிரப்பச் சென்ற காசாளர் மற்றும் பாதுகாவலரை சுட்டுக் கொன்று 11 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நரோலா நகரில் உள்ள ஏடிம்மில் பணம் நிரப்புவதற்காக தனியார் வங்கி காசாளர் மற்றும் பாதுகாவலர் வேனில் சென்றனர். ஏடிஎம்மிற்கு வெளியே வேனை நிறுத்திவிட்டு, பணத்தை நிரப்ப காசாளர் முற்பட்டார்.
 
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், காசாளர் மற்றும் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு 11 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இதில் சம்பவ இடத்திலே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலிலே இது போன்ற சம்பவம் நடைபெற்றது அப்பகுதிவாசிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் தான் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments