Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரணாப் முகர்ஜியுடன் ரோசைய்யா திடீர் சந்திப்பு

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (23:53 IST)
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் தமிழக கவர்னர் ரோசைய்யா திடீரென சந்தித்து சாலை அணிவித்தார்.
 

 
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மெடக் மாவட்டத்தில் உள்ள  எர்ரவள்ளி கிராமத்தில் உள்ள, தனது பண்ணை வீட்டில், ரூ.20 கோடி செலவில், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் மகாசண்டியாகம் நடத்தி வருகிறார். இந்த மகா சண்டியாகத்தில் கலந்து கொள்ள, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருகை தந்தார்.
 
இந்த பூஜையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் போன்ற முன்னணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, தமிழக கவர்னர் ரோசைய்யா திடீரென சந்தித்து பேசினார். இதற்காக, அவர் தமிழகத்தில் இருந்து எர்ரவள்ளி கிராமத்திற்கு வருகை தந்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமா சந்திப்பு என கவர்னர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. 

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! சர்ச்சையில் சிக்கிய மாநகராட்சி..!!

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

Show comments