Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியால் இறந்த தந்தை.. டிவி நிகழ்ச்சியில் கண்கலங்கிய ரொனால்டோ ! பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (15:21 IST)
உலகில் நம்பர் ஒன் கால்பந்து விளையாட்டு வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்,திடீரென தன் தனது தந்தையைப்  பற்றி கூறுகையில் சற்று உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். இந்த வீடியோ   வைரலாகிவருகிறது.
போர்சுகல் நாட்டின் கால்பாந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது ஜூவெண்ட்ஸ் எஃப்.சி (Juventus F.C.) என்ற கிளப்புக்காக விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில் பிரிட்டன்  ஊடகம் ஒன்றின் நேர்காணலில் ரொனால்டோ  கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரொனால்டோ,அவரது தந்தை ஜோஸ் டினிட் அவெரொ ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படத் தொகுப்பை ஒளிபரப்பினர். அந்த நேரத்தில் ரொனால்டோவின் தந்தை ரொனால்டோவைக் குறித்து பாராட்டிப் பேசுவது போன்ற வீடியோவைப் பார்த்த ரொனால்டோ கண்கலங்கிவிட்டார். சிறிது நேரத்திற்குப் பின் நிதானத்துக்கு வந்த ரொனால்டோ, தான் இந்த வீடியோவை இப்பொழுதான் பார்ப்பதாக கூறியுள்ளார்.
 
மேலும். ’உங்களுக்கு எதாவது கவலை இருக்கிறதா என நெறியாளர் கேட்டார். அதற்கு, உலகின் நெம்பர் ஒன் வீரனாக நான் இன்று இருக்கிறேன். ஆனால் அதைப் பார்க்க எனது அப்பா  இன்று உயிருடன் இல்லை என வேதனையுடன் ரொனால்டோ பதில் கூறினார்.பின்னர், நீங்கள் உயரிய நிலைக்கு வந்ததை உங்கள் பார்த்ததில்லையா என கேட்டார் நெறியாளர். அதற்கு, இல்லை என்று வருத்தத்துடன் பதிலளித்தார் ரொனால்டோ. ‘இப்படியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடல் செல்கிறது.
 
ரொனால்டோவின் தந்தை  ஜோஸ் டினிட் அவெரொ, மதுவுக்கு அடிமையாகி அடிமையானதால் அவரது கல்லீரல் செயலிழந்துவிட்டது. ரொனால்டோவுக்கு 20 வயது இருக்கும் போது, கடந்த 2005 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு ரொனால்டோ கால்பந்தாட்ட கிளப் அணிகளில் சேர்ந்து உலகின் கால்பந்தாட்ட நட்சத்திர வீரராக விளங்கியதைப் பார்க்காமலே தந்தை இறந்துவிட்டதை நினைத்து ரொனால்டோ இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கலங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments