Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் ஊழல்: நடிகை ரோஜா குற்றச்சாட்டு

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (17:09 IST)
திருப்பதி கோவில் செயல் அலுவலர் மற்ற ஊழியர்களை கையில் போட்டுக்கொண்டு ஊழல் செய்வதாக பிரபல நடிகையும், நகரி தொகுதியின் எம்.எல்.ஏவுமான ரோஜா குற்றஞ்சாட்டியுள்ளார்

இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடிகை ரோஜா சென்றார். ஆனால் அவருக்கு கோவில் நிர்வாகம்  முக்கிய பிரமுகர்களுகான டிக்கெட்டை வழங்க மறுத்துவிட்டது. இதனால் ரோஜா, பாதயாத்திரை மேற்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுகு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, 'முக்கிய பிரமுகர்களுகான டிக்கெட் எனக்கு வழங்கப்படவில்லை. ஆனாலும் பாதயாத்திரையாக வந்து டிக்கெட்டை பெற்றுக் கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தற்போதைய செயல் அலுவலர் வட இந்தியர், அதனால் அவருக்கு இந்த கோவிலின் நிலைமை தெரியாது. இதை சாதகமாக்கி கொண்டு கோவிலின் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்டு, அறங்காவலர் குழுவை அமைக்காமல் அதிகாரிகள் துணையுடன் ஊழல் செய்து வருகிறார்' என்று குற்றஞ்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments