Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹிங்கியா மக்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. உபி முதல்வர்

rohingya
Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (07:17 IST)
மியான்மரில் ரோஹிங்கியா மக்கள் அடித்து விரட்டப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் அகதிகளாக நுழைய முயற்சித்து வருகின்றனர்.



 
 
ரோஹிங்கியா மக்களை அனுமதிக்க இந்தியா மறுத்துள்ளதோடு, ஏற்கனவே 'இந்தியாவுக்குள் நுழைந்திருக்கும் ரோஹிங்கியா மக்கள் நாற்பதாயிரம் பேரையும் நாடுகடத்தும் திட்டத்தில் இந்தியா உள்ளதாக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ''ரோஹிங்கியா மக்களைப் பற்றி தங்களது நிலைப்பாட்டை இந்திய அரசு தெளிவாக அறிவித்துவிட்டது. இந்தியாவுக்கு வரும் ரோஹிங்கியா இன மக்கள் அகதிகளே அல்ல. அவர்கள் அழையாமல் நாட்டுக்குள் நுழைபவர்கள். அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிலர் அவர்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருவது வருத்தத்திற்குரியது. அவர்களுக்குத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments