Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்.! மணிப்பூரில் பதற்றம்..!!

Senthil Velan
சனி, 7 செப்டம்பர் 2024 (10:56 IST)
மணிப்பூரில் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.
 
மணிப்பூரில் வசிக்கும் குக்கி - மெய்தி இன மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. மேலும் 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கியது.
 
மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவ்வப்போது மோதல் வெடித்து வருகிறது 
 
இந்த நிலையில், பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டின் வளாகத்தில் விழுந்த இந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.


ALSO READ: உதயநிதிக்காக பாடுபடும் அன்பில் மகேஷ்.! தமிழ்நாட்டை காவி நாடாக மாற்ற முயற்சியா? ஜெயக்குமார்...
 
ராக்கெட் குண்டு வீச்சு நடந்த இடத்திற்கு அருகில்தான் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படுகிறது.  தாக்குதல் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments