Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்த 2 விரைவு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை.. அதிர்ச்சியில் பயணிகள்..!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (14:45 IST)
ஆந்திராவிலிருந்து சென்னை வந்த இரண்டு விரைவு ரயில்களில் அடுத்தடுத்து பயணிகளிடம் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று இரவு ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் வந்த இரண்டு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா  என்ற பகுதியில் திடீரென கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் நகைகளை பறித்து சென்றதாக தெரிகிறது.
 
 பயணிகள் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி தங்களை துரத்திய பயணிகளை கற்களால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. 
 
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  சென்னை வந்த இரண்டு ரயில்களை கொள்ளையர்கள் குறிவைத்து கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments