Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்த 2 விரைவு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை.. அதிர்ச்சியில் பயணிகள்..!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (14:45 IST)
ஆந்திராவிலிருந்து சென்னை வந்த இரண்டு விரைவு ரயில்களில் அடுத்தடுத்து பயணிகளிடம் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று இரவு ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் வந்த இரண்டு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா  என்ற பகுதியில் திடீரென கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் நகைகளை பறித்து சென்றதாக தெரிகிறது.
 
 பயணிகள் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி தங்களை துரத்திய பயணிகளை கற்களால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. 
 
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  சென்னை வந்த இரண்டு ரயில்களை கொள்ளையர்கள் குறிவைத்து கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments