Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு கட்சியின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை: பீகாரில் பரபரப்பு

Webdunia
புதன், 29 ஜூலை 2015 (19:58 IST)
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
வைஷாலி மாவட்டம் தாட்நகரில் வசித்து வந்தவர் ஷிவ்ஜி ராய் (வயது 45). ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பிரமுகரான இவர், தாட்நகர் கிராம பஞ்சாயத்து தலைவராக பொறுப்பில் இருந்தார். நேற்று இரவு இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், கொலையாளிகளை தேடி வருவதாகவும் மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments