சிபிஐ புதிய இயக்குனர் யார்? பிரதமர் தலைமையிலான குழு அறிவிப்பு

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (17:35 IST)
கடந்த ஒரு மாதமாக சிபிஐ இயக்குனர் பதவியை பிரதமர் தலைமையிலான குழுவும், நீதிமன்றமும் பந்தாடி வந்த நிலையில் சிபிஐக்கு புதிய இயக்குனர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ரிஷி கே.சுக்லா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரதமர் தலைமையிலான குழு அதிகாரபூர்வமான அறிவித்துள்ளது.

சிபிஐ அமைப்பின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரிஷி கே.சுக்லா மத்திய பிரதேசத்தில் டிஜிபி.யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ அமைப்பிற்கு புதிய நிரந்தர தலைவர் நியமனம் செய்யப்பட்டுவிட்டதால் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனர் பொறுப்பிலிருந்து நாகேஷ்வர் ராவ் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments