Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10% இட ஒதுக்கீடு மசோதா: மக்களவையை அடுத்து மாநிலங்களவையில் இன்று தாக்கல்

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (07:58 IST)
பொருளாதார நிலையில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கோரும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்த நிலையில் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கான மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக  323 வாக்குகள் விழுந்ததால் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவை எதிர்க்கும் திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகளுக்கு மக்களவையில் உறுப்பினர்களே இல்லாததால் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை

இந்த நிலையில் 10% இட ஒதுக்கீட்டிற்கான மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்றாலும் மாயாவதி உள்ளிட்ட ஒருசில கட்சிகள் இந்த மசோதாவை வரவேற்றுள்ளது. எனவே திமுக உள்ளிட்ட உறுப்ப்பினரகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இன்றும் மாநிலங்களவையிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments