Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு: மறுதேதி அறிவிப்பு

Siva
புதன், 15 ஜனவரி 2025 (09:50 IST)
பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வின் மறு தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தேசிய தேர்வு முகமை நடத்தும் யு.ஜி.சி. நெட் தேர்வு, ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, ஜனவரி 14 முதல் 16 வரை கொண்டாடப்படுவதால் இந்த தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மதுரை எம் பி சு வெங்கடேசன் உள்பட பலர் தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை வைத்தனர்.
 
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, ஜனவரி 15ஆம் தேதி நடைபெற இருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இந்த தேர்வுக்கான மாற்று தேதியை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் யு.ஜி.சி. நெட் தேர்வுகள் நடைபெறும் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments