Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு: மறுதேதி அறிவிப்பு

Siva
புதன், 15 ஜனவரி 2025 (09:50 IST)
பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வின் மறு தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தேசிய தேர்வு முகமை நடத்தும் யு.ஜி.சி. நெட் தேர்வு, ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, ஜனவரி 14 முதல் 16 வரை கொண்டாடப்படுவதால் இந்த தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மதுரை எம் பி சு வெங்கடேசன் உள்பட பலர் தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை வைத்தனர்.
 
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, ஜனவரி 15ஆம் தேதி நடைபெற இருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இந்த தேர்வுக்கான மாற்று தேதியை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் யு.ஜி.சி. நெட் தேர்வுகள் நடைபெறும் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்.. புதிய தலைவராக பதவியேற்பு..!

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments