Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசு தினம்: டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி

குடியரசு தினம்: டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி
, திங்கள், 26 ஜனவரி 2015 (10:23 IST)
டெல்லியில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார்.
 
இந்தியாவின் 66 ஆவது குடியரசு தின விழா இன்று நாடெங்கும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் பங்கேற்பதாற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிட்செல் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, வரவேற்றார். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார்.
 
டெல்லியில் காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil