Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் புனிதமானது அல்ல; அங்கும் பாலியல் தொல்லை?

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (11:43 IST)
கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து #MeToo என்ற ஹேஸ்டேக் டிரண்டாகி வருகிறது. இந்த ஹேஸ்டேக்கை உருவாக்கி, பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கும் பெண்கள் மட்டுமின்றி அனைவரும் டுவீட் செய்து வருகின்றனர். 
 
அந்த வகையில் சமீபத்தில் ஸ்ரீ ரெட்டி விவகாரம் தெலுங்கு சினிமாவில் புயலாய் உருவெடுத்தது. பாலியல் ஆளுமைக்கு அடிபணிந்து போனால்தான், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதாக தொடர்ந்து பல நடிகைகள் ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 
இதை ஆதரித்து பேசியுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பியும் மூத்த தலைவருமான ரேணுகா சவுத்ரி, 'சினிமா துறையில் மட்டும் பாலியல் தொல்லை நடைபெறுவதில்லை. அனைத்து துறைகளிலும் நடக்கிறது. இது ஒரு கசப்பான உண்மை. 
 
நாடாளுமன்றமோ அல்லது மற்ற பணி இடங்களோ புனிதமானது என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். பெண்களுக்கு எங்கும் இது போன்ற பிரச்சனை இருக்கும் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்