Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

Senthil Velan
செவ்வாய், 18 ஜூன் 2024 (16:51 IST)
மஹாராஷ்டிராவில் ரீல்ஸ் எடுப்பதற்காக காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சம்பாஜி நகரில் உள்ள ஹனுமன்நகரைச் சேர்ந்த 23 வயதான ஸ்வேதா தீபக் தனது காரை எடுத்துக்கொண்டு சுலிபஞ்சன் மலையில் உள்ள தத்தாத்ரேயர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
 
ரீல்ஸ் மீது உள்ள ஆர்வத்தில் தன்னுடன் வந்த தனது  நண்பர் சூரஜ் சஞ்சாவிடம் தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுக்க சொல்லி கூறியுள்ளார். பின் அவரும் வீடியோவை ஆன் செய்துவிட்டு காரை ஓட்ட கூறியுள்ளார். 
 
அப்போது,  காரை ரிவல்ஸ் செய்ய முயற்சித்த போது, திடீரென பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை சுவேதா அழுத்தியதால், கார் மின்னல் வேகத்தில் பின்னோக்கி சீறிப்பாய்ந்து தடுப்புகளை உடைத்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது.

ALSO READ: முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

இதில் சுவேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுவேதா, காருடன் 300 அடி பளத்தில் விழும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி கண்கலங்க வைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

AI தொழில்நுட்பத்துடன் அதிரடியாக வெளியானது Motorola Edge 50 Ultra!

காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு: கணவர் மேகநாதன் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments