Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு தகவல்

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (17:30 IST)
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் டெல்லியில் கடும் குளிரிலும் வெயிலும் போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுடன் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சு நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் டெல்லியில் கடும் குளிரிலும் வெயிலும் போராடி வரும் விவசாயிகள் தொடர்ந்து 33 வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சு நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தகவல் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் மத்திய வேளாண் சட்டங்கள் குறித்து வரும்  30 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
நாளை விவசாய சங்கப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தத்திட்டமிட்ட நிலையில், நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே பலகட்டங்களாக மத்திய அரசிற்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூக
உடன்பாடு எட்டப்படாததால் வரும் 30 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments