Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது! மகாராஷ்டிரா சட்டசபையில் தீர்மானம்!

Prasanth Karthick
வியாழன், 10 அக்டோபர் 2024 (14:21 IST)

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா நேற்று இரவு காலமான நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

பிரபலமான இந்திய தொழில் நிறுவனமான டாடா நிறுவன குழும தலைவர் ரத்தன் டாடா. தொழிலதிபராக மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு பல உதவிகளையும் தொடர்ந்து செய்து வந்தவர் ரத்தன் டாடா. 

 

நேற்று இரவு உடல்நலக்குறைவால் ரத்தன் டாடா காலமான நிலையில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. 
 

ALSO READ: நான் சாய்வதற்கு கிடைத்த அந்தக் கடைசித் தோளை விட்டேன்: முரசொலி செல்வம் குறித்து முதல்வர்..!
 

ரத்தன் டாடா இதுவரை இந்திய அரசின் பத்ம விருதுகளான பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்திய பொருளாதாரத்தின், கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

 

இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டசபையில் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் சர்ச்சை! விசிகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

அரபிக்கடலில் உருவானது புயல் சின்னம் ..வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு..!

இந்தியாவின் உண்மையான மகன் மறைந்துவிட்டார்.. டாடா மறைவு குறித்து ஏஆர் ரஹ்மான்..!

முரசொலி மாறன் சகோதரர் முரசொலி செல்வம் காலமானார்: திமுக தொண்டர்கள் அஞ்சலி..!

தூய்மை நகரங்கள் பட்டியலில் சிங்கார சென்னைக்கு 199வது இடம்: ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments