Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோயாளிக்கு வழங்கிய பிரெட் பாக்கெட்டில் எலி : எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (15:00 IST)
டெல்லியில் உள்ள் புகழ் பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில், நோயாளிக்கு கொடுத்த பிரெட் பாக்கெட்டில் இருந்து எலி ஒன்று குதித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அதி அதி நவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட ஒன்றாகும்.  ஆனால் அங்கு சுகாதார சீர்கேடு மலிந்து வருவதாக சமீபகாலமாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதை நிரூபிப்பது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது
 
அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு தினமும் பிரெட், பால் முதலியவை கொடுப்பது வழக்கம். இந்நிலையில், நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரெட் பாக்கெட்டை அவர் பிரித்தபோது அதற்குள்ளிருந்து ஒரு எலி தாவிக் குதித்து ஓடியுள்ளது. இதைப் பார்த்து அந்த நோயாளியும் அங்கிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
அது பிரவுன் ஹை பைபர் பிரெட் ஆகும். இதை பான் நியூட்ரியன்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. எப்படி சீல் வைக்கப்பட்ட பாக்கெட்டிலிருந்து உயிருடன் எலி ஓடியது என்று தெரியவில்லை.
 
ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மறுத்துள்ளார். ஆனால் நடந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மருத்துவரே கூறியுள்ளார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை, அந்த பிரெட் கம்பெனிக்கு  3 வருட தடை விதித்துள்ளதாம். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments