Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் காரில் 4 பேர் என்னை கற்பழித்தார்கள்: காவல் நிலையத்தில் பெண் பரபரப்பு புகார்

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2014 (18:30 IST)
ஓடும் காரில் 4 பேர் சேர்ந்து கற்பழித்ததாக 35 வயது பெண் காவல்துறையில் பரபரப்பு புகார் செய்தார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
தானே மிரா ரோட்டில் இருந்து ‘ஷாப்பிங்’ செய்வதற்காக 35 வயது பெண் ஒருவர் மும்பை பாந்திரா லிங்க் ரோடு வந்தார். பின்னர் அங்கிருந்து பாந்திரா ரயில் நிலையம் செல்ல ஆட்டோவில் ஏறி சென்றார். ஆட்டோ டிரைவர் அவரை தாராவியில் இறக்கி விட்டார். அப்போது அங்கு 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் காரில் ‘லிப்ட்’ கொடுப்பதாக கூறி அந்த பெண்ணை ஏற்றி சென்றனர்.
 
ஆனால் ஓடும் காரிலேயே அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
 
இது தொடர்பாக உடனடியாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 2 பேர் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணை சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
இதுபற்றி விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டதாக தெரியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் முழுமையான மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments