Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் பலாத்காரம்: உச்ச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற பெண் வழக்குரைஞர்

பாலியல் பலாத்காரம்: உச்ச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற பெண் வழக்குரைஞர்
, செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (11:17 IST)
உறவினர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பெண் வழக்குரைஞர் தற்கொலைக்கு முயன்றார்.
 
கடந்த ஆண்டு தனது உறவினர்கள் சேர்ந்து தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, தனக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டதாகவும் பெண் வழக்குரைஞர் ஒருவர் குற்றஞ் சாற்றியிருந்தார்.
 
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு வந்த அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் மீட்டு டெல்லி ராம்  மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
இதைத் தொடர்ந்து வழக்குரைஞர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil