Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கற்பழிப்பு குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல விருப்பம்: டெல்லி காவல்துறை ஆணையர்

கற்பழிப்பு குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல விருப்பம்: டெல்லி காவல்துறை ஆணையர்
, செவ்வாய், 5 ஜனவரி 2016 (12:27 IST)
சட்டம் அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல விரும்புகிறோம் என்று டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பஸ்சி கூறியுள்ளார்.


 

 
இது குறித்து பி.எஸ்.பஸ்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பெண்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம். கற்பழிப்பு உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, சட்டம் அனுமதித்தால், சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுடவோ, தூக்கிலிடவோ விரும்புகிறோம்.
 
அனுமதி கிடைத்தால், அத்தகைய அதிகாரத்தை பயன்படுத்த டெல்லி காவல்துறை தயங்காது.
 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதற்கு, ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் ஒரு காரணம் என்று கருதுகிறோம்.
 
எனவே, பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது நல்லது. அதற்காக நாங்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக கருதக்கூடாது.
 
பெண்கள் நலன்  என்று கூறி, வருத்தம் தெரிவிப்பவர்களை விட, காவல்துறையினராகிய நாங்கள் பெண்கள் நலனில் கூடுதல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு பி.எஸ்.பஸ்சி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil