ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பாஜக ஆளும் மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை!

Prasanth Karthick
வெள்ளி, 12 ஜனவரி 2024 (09:23 IST)
ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பாஜக ஆளும் சில மாநிலங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.



அயோத்தியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதியன்று கும்பாபிஷேகம் செய்து திறக்கப்பட உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி உத்தர பிரதேசத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேசத்தில் அன்றைய தினம் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: தற்கொலை எண்ணம் எனக்கும் வந்துள்ளது… அம்மா கொடுத்த நம்பிக்கை – ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்த தகவல்!

உத்தர பிரதேசத்தை தொடர்ந்து பாஜக ஆளும் சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களிலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி மதுக்கடைகள் ஜனவரி 22 அன்று செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments