Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் கும்பாபிஷேகம்! இந்திய அரச வம்சாவளி கொரிய ராணிக்கு அழைப்பு!

Prasanth Karthick
திங்கள், 15 ஜனவரி 2024 (11:42 IST)
ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரபு ராம் வம்சத்தை சேர்ந்த கொரிய ராணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



அயோத்தியில் 1000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 22 அன்று கோலாகலமாக கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்தியாவில் உள்ள பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 55 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள், தூதர்களுக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பிரபு ராம் வம்சத்தை சேர்ந்த கொரிய ராணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கொரிய அரசரை மணம் செய்து சென்ற சுரிரத்னா என்ற ராணியாரின் வம்ச தோன்றல் இவர்.

மேலும் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை என 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments