ராமர் கோவில் கும்பாபிஷேகம்! இந்திய அரச வம்சாவளி கொரிய ராணிக்கு அழைப்பு!

Prasanth Karthick
திங்கள், 15 ஜனவரி 2024 (11:42 IST)
ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரபு ராம் வம்சத்தை சேர்ந்த கொரிய ராணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



அயோத்தியில் 1000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 22 அன்று கோலாகலமாக கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்தியாவில் உள்ள பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 55 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள், தூதர்களுக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பிரபு ராம் வம்சத்தை சேர்ந்த கொரிய ராணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கொரிய அரசரை மணம் செய்து சென்ற சுரிரத்னா என்ற ராணியாரின் வம்ச தோன்றல் இவர்.

மேலும் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை என 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments