Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்காத அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு !!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:58 IST)
வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில மாநிலங்களவையில் நேற்று அமலியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு இன்று காலை சஸ்பெண்ட் செய்தார். 
 
இதனை அடுத்து அந்த எட்டு எம்பிக்களும் மாநிலங்களவையில் இன்று அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களுக்கு ஆதரவாக எதிர்க் கட்சி எம்பிகளும் குரல் கொடுத்ததால் உறுப்பினர்களிடையே தொடர் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

17 ஆண்டுகளாக செனாப் பாலம் கட்டும் பணியில் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாஜக-வை வீழ்த்துவது முக்கியமா, திமுக-வை வீழ்த்துவது முக்கியமா? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்: துரை வைகோ

ஜூன் 13 வரை கொட்டப்போகுது மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

மகளிர் உதவித்தொகை.. வங்கி கணக்கை மாற்ற முடியாமல் பயனாளிகள் திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments