Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் மாநிலங்களவை எம்.பி. சச்சின் டெண்டுல்கர்

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் மாநிலங்களவை எம்.பி. சச்சின் டெண்டுல்கர்
, வியாழன், 23 ஏப்ரல் 2015 (17:43 IST)
கிரிக்கெட் ஜாம்பவானும் மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் இன்று மேல் சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்.
 
அரிய நிகழ்வாக சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்றத்திற்கு வந்ததால், சக உறுப்பினர்கள் கவனத்தை ஈர்த்தார். மதியம் 12 மணியளவில் நாடாளுமன்ற அவைக்குள் சச்சின் நுழைந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திமுக எம்.பி. சிவா மற்றும் சில இளம் உறுப்பினர்கள் சச்சினுடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
 
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் கடந்த ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு  மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். உறுப்பினராக நியமிக்கப்பட்டதிலிருந்து பெரும்பாலான அமர்வில்  சச்சின் டெண்டுல்கர் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் இருந்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil