Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாயப்பு: பா.ஜ.க. எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (07:36 IST)
குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பீகார் தேர்தலில் போட்டியிட வாயப்பு வழங்கப்படுவதாக பா.ஜ.க. தலைமை மீது அக்கட்சி எம்.பி.குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
பா.ஜ.க. எம்.பி., ஆர்.கே. சிங் என்பவர் தான் இந்த சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியவர்.  இது குறித்து அவர் கூறுகையில், "தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் பலரும் கட்சியால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பாஜக அவசர அவசரமாக  சேர்த்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறது".
 
"பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு வேட்பாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர். " என்று கூறினார். பீகாரில் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அக்கட்சி எம்.பி. ஆர்.கே.சிங்கின் இத்தகைய பேச்சு பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
 
ஆர்.கே. சிங்கின் இத்தகைய குற்றச்சாட்டை பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments