Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு செல்போன் பரிசு! – குஜராத்தில் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (08:40 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குஜராத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு செல்போன் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டு அலைகள் தீவிரமாக பரவிய நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதுவரை இந்தியா முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளுக்கு மேலாக செலுத்தப்பட்டுள்ளது. எனினும் பல மாநிலங்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டாவது டோஸ் போடுவதை ஊக்குவிக்க இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments