Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பாரென தகவல்

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பாரென தகவல்
, வெள்ளி, 6 ஜூன் 2014 (16:06 IST)
ஆந்திர மாநிலம், சீமாந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, சீமாந்திராவின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 8 ஆம் தேதி பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பாரென நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.
சீமாந்திராவின் முதலமைச்சராக பதவி ஏற்கும் சந்திரபாபு நாயுடு, இந்த விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
webdunia
இவ்விழாவில் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் பவன் கல்யான் ஆகியோரை சந்திரபாபு நாயுடு தனிப்பட்ட முறையில் தொலைபேசி வாயிலாக அழைத்ததாகவும், அவர்கள் அவர்களின் வருகையை உறுதி செய்துள்ளதாகவும் தெரிகிறது. 
 
இந்த பதவியேற்பு விழாவிற்காக மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விழா நடைபெறும் 70 ஏக்கர் இடத்தில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து வசதிகள், அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் தங்க பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil