Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு மறுத்த இளைஞர்; பிறப்பு உறுப்பை வெட்டிய ஆசிரியை! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:02 IST)
ராஜஸ்தானில் திருமணத்திற்கு மறுத்த இளைஞரின் பிறப்பு உறுப்பை யோகா ஆசிரியை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் 35 வயதான பெண் யோகா ஆசிரியை ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்ட நிலையில் தனிமையில் அடிக்கடி இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இளைஞர் தான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். அதற்கு யோகா ஆசிரியையான பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்க இளைஞர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளைஞரின் பிறப்பு உறுப்பை அறுத்துள்ளார் அந்த பெண். பின்னர் அவரே இளைஞரை மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளார்.

இளைஞர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆன பிறகு பெண்ணின் செயல் குறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments