Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பாகிஸ்தானில் படப்பிடிப்பை நடத்த முடியுமா’ - சல்மான் கானுக்கு ராஜ் தாக்கரே சவால்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (17:02 IST)
சல்மான் கானுக்கு பாகிஸ்தான் நடிகர்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால் பாகிஸ்தானில் படப்பிடிப்பை நடத்தட்டும் பார்க்கலாம் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.
 

 
உரி தாக்குதலை அடுத்து ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பு, மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வந்த பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறி 48 மணிநேரம் கெடுவும் விதித்தது.
 
இதையடுத்து பாகிஸ்தான் கலைஞர்களும் அவர்களின் நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்திருந்தார்.
 
வேறு சில திரைக்கலைஞர்களும் இயக்குநர்களும் கூட கலைஞர்களை தீவிரவாதிகளாக பார்க்கக்கூடாது என்று கருத்துத் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ”சல்மான் கானுக்கு பாகிஸ்தான் நடிகர்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால் பாகிஸ்தான் அரசிடம் பெர்மிட் வாங்கி அங்கு அவரது படப்பிடிப்பை நடத்தட்டும் பார்க்கலாம். இது அவருக்கு நாங்கள் விடும் சவால்” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments