Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பாகிஸ்தானில் படப்பிடிப்பை நடத்த முடியுமா’ - சல்மான் கானுக்கு ராஜ் தாக்கரே சவால்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (17:02 IST)
சல்மான் கானுக்கு பாகிஸ்தான் நடிகர்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால் பாகிஸ்தானில் படப்பிடிப்பை நடத்தட்டும் பார்க்கலாம் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.
 

 
உரி தாக்குதலை அடுத்து ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பு, மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வந்த பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறி 48 மணிநேரம் கெடுவும் விதித்தது.
 
இதையடுத்து பாகிஸ்தான் கலைஞர்களும் அவர்களின் நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்திருந்தார்.
 
வேறு சில திரைக்கலைஞர்களும் இயக்குநர்களும் கூட கலைஞர்களை தீவிரவாதிகளாக பார்க்கக்கூடாது என்று கருத்துத் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ”சல்மான் கானுக்கு பாகிஸ்தான் நடிகர்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால் பாகிஸ்தான் அரசிடம் பெர்மிட் வாங்கி அங்கு அவரது படப்பிடிப்பை நடத்தட்டும் பார்க்கலாம். இது அவருக்கு நாங்கள் விடும் சவால்” என்று தெரிவித்துள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments