Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்த வருண பகவான்.. கனமழையால் மக்கள் மகிழ்ச்சி..!

Mahendran
வெள்ளி, 3 மே 2024 (16:52 IST)
கடந்த சில நாட்களாக பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிய நிலையில் தற்போது அங்கு நல்ல மழை பெய்து கொண்டு வருவதாகவும் இன்னும் சில நாட்களுக்கு பெங்களூரில் மழை பெய்யும் என்று கூறப்படுவதால் தண்ணீர் பஞ்சத்தை வருண பகவான் தீர்த்து வைத்து விட்டதாக புறப்படுகிறது. 
 
பெங்களூரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் இருந்த நிலையில் பெங்களூர் மக்கள் மிகவும் திண்டாட்டத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று பெங்களூரில் நல்ல பெயராக மழை பெய்து வரும் நிலையில் வரும் நாட்களிலும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது
 
5 மாதங்களுக்கு பிறகு பெங்களூரில் நேற்றும் இன்றும் மழை பெய்துள்ளது என்றும் குறிப்பாக இந்திரா நகர், விஜயநகர் பகுதியில் நல்ல மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை நிலவு வருவதாகவும் தெரிகிறது 
 
நேற்று இரவு பெங்களூரில்  4.3 மில்லி மீட்டர் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெங்களூரில் நிலவும் வானிலையை பார்க்கும் போது இன்னும் இரண்டு வாரங்களில் கனமழைக்குக் வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் நல்ல மழை பெய்யும் என்று கூறப்படுகிறது 
 
இதனால் பெங்களூரில் தண்ணீர் கஷ்டம் இப்போதைக்கு இருக்காது என்று தெரிய வருகிறது. இதனால் பெங்களூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments