Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை: அதிகாரிகள் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (10:43 IST)
ரயில்களில் பட்டாசுகள் எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வியாபாரிகள் அல்லது ரயில் பயணிகள் பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
ரயில் நிலையங்களில் பட்டாசு எடுத்துச் செல்வது குறித்து கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விதிகளை மீறி எடுத்துச் சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் ஆயிரம் ரூபாய் அல்லது ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இதுபோன்ற விதிமீறல் தொடர்ந்து ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்வது குறித்து கண்காணிக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments