Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்பு ? – பகுப்பாய்வு பணிகளை மேற்கொள்ளும் வாரியம் !

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (08:08 IST)
ரயில்வேத் துறையின் நடைமுறையில் உள்ள பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் குறித்த பகுப்பாய்வு நடைபெற்று வருவதாக ரயில்வே வாரியத் தலைவர் விகே யாதவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறை இந்த ஆண்டின் இறுதிக்குள்  20 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடைபெறுவதாக ரயில்வே வாரியத் துறை தலைவர் வி கே யாதவ் நேற்றுதெரிவித்திருந்தார். ஆனால் விலை உயர்த்தப்படுமா என்பது குறித்து அவர் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. கட்டண உயர்வு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போதைய நிலவரப்படி பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும் சரக்கு விதத்தில் 6.6 சதவீதம் உயர்த்தப்பட்டது. ரயில்வே துறையின் உள்ளிட்டு செலவுகள் அதிகரித்து வருவதால், அதை ஈடுகட்ட கட்டண உயர்வு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments