Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டெய்னர் ரயில் காணாமல் போனதா? – ரயில்வே அளித்த விளக்கம்!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (10:58 IST)
நாக்பூரிலிருந்து புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று மாயமானதாக வெளியான தகவல் குறித்து ரயில்வே விளக்கமளித்துள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள மிஹான் என்ற இடத்திலிருந்து 90 கண்டெய்னர்களில் பல கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்களை ஏற்றிக் கொண்டு கடந்த 1ம் தேதியன்று சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை சென்றடைய வேண்டிய அந்த ரயில் 13 நாட்களாகியும் இலக்கை சென்றடையவில்லை என தகவல்கள் வெளியானது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. கடைசியாக அந்த ரயில் ஊம்பர்லி ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், பின்னர் மாயமானதாகவும் கூறப்பட்டது.

இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே நிர்வாகம் “நாக்பூர் – மும்பை இடையே பயணித்த சரக்கு ரயில் காணாமல் போனதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. வாசகர்களுக்கு ஒரு செய்தியை வழங்கும் முன்னர் அதன் உண்மை தன்மையை சோதிக்கவும்” என கூறியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments