கொசுவர்த்தி அட்டையில் மூடிய உணவு? – ரயில்வே சாப்பாட்டால் பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (11:07 IST)
ரயில்வேயில் வழங்கப்படும் உணவு பார்சல் கொசுவர்த்தி அட்டையால் மூடப்பட்டிருந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ரயில்வே நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் ரயில் நிலையங்களில் பல காண்ட்ராக்ட் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ரயில்களுக்குள் ஐஆர்சிடிசியின் கேண்டீன் இயங்கி வருகிறது. ரயில்களில் பயணிக்கும் மக்கள் ரயில் நிலைய உணவகங்களிலும், ரயிலில் உள்ள உணவகத்திலும் உணவை வாங்குகின்றனர்.

ALSO READ: நாளை 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை! – ஐ.நா அறிவிப்பு!

சமீபத்தில் அப்படி ஒருவர் வாங்கிய உணவு டப்பா மேல் கொசுவர்த்தி உள்ளிட்ட கெமிக்கல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் அட்டைகள் மூடப்பட்டு சாப்பாடு டெலிவரி செய்யப்பட்டதாக ட்விட்டர் பயனர் ஒருவர் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

எந்த ரயிலில் அல்லது ரயில் நிலையத்தில் அவர் அந்த உணவை வாங்கினார் என அதில் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments