Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில்வே பட்ஜெட் 2014 - ரயில்வே சம்பாதித்த ஒரு ரூபாயில் 94 பைசாவை செலவு செய்கிறது - சதானந்த கௌடா

ரயில்வே பட்ஜெட் 2014 - ரயில்வே சம்பாதித்த ஒரு ரூபாயில் 94 பைசாவை செலவு செய்கிறது - சதானந்த கௌடா
, செவ்வாய், 8 ஜூலை 2014 (12:32 IST)
2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து வரும் மத்திய அமைச்சர் சதானந்த கௌடா ரயில்வே சம்பாதித்த ஒரு ரூபாயில் 94 பைசாவை செலவு செய்வதாக தெரிவித்துள்ளார். 
 
2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். 
 
தற்போது ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அவர், இதற்கு முன் ரயில்வே துறையில் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டதே தவிர திட்டங்களை முடிப்பதில் கவனம் இல்லை எனவும், பட்ஜெட்டில் சமூக மற்றும் வணிக கடமைகளை சமப்படுத்த வேண்டும் எனவும், ரயில்வே சம்பாதித்த ஒரு ரூபாயில் 94 பைசாவை செலவு செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஆண்டு முழுவதும் ரயில்வே துறையை வளர்ச்சி அடைய வைக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil