Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி பதுங்குவது ஏன்? – சீனா விவாகாரத்தில் ராகுல் காந்தி கேள்வி!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (10:57 IST)
லடாக் எல்லைப்பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார்.

லடாக் பகுதியில் இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலாம் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதேசமயம் சீனாவிலும் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவுடனான இந்த மோதல் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சீனாவின் இந்த தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ”பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? பதுங்குவது ஏன்? என்ன நடந்தது என்பது குறித்து அவர் விளக்க வேண்டும். நமது வீரர்களை தாக்க சீனாவுக்கு எவ்வளவு திமிர்? நமது எல்லையை அபகரிக்க அவர்களுக்கு என்ன திமிர்?” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments