பிரதமர் மோடி பதுங்குவது ஏன்? – சீனா விவாகாரத்தில் ராகுல் காந்தி கேள்வி!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (10:57 IST)
லடாக் எல்லைப்பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார்.

லடாக் பகுதியில் இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலாம் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதேசமயம் சீனாவிலும் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவுடனான இந்த மோதல் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சீனாவின் இந்த தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ”பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? பதுங்குவது ஏன்? என்ன நடந்தது என்பது குறித்து அவர் விளக்க வேண்டும். நமது வீரர்களை தாக்க சீனாவுக்கு எவ்வளவு திமிர்? நமது எல்லையை அபகரிக்க அவர்களுக்கு என்ன திமிர்?” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments