Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள வெள்ள பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் ராகுல் காந்தி

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (07:29 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை  இன்று நேரில் பார்வையிட இருக்கிறார்.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அனுப்பப்படுகிறது. 
இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்றும், நாளையும் பார்வையிட இருக்கிறார். மேலும் மக்களுக்கு உதவிய மீனவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களையும் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments