Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்தமா லாக்டவுன் போடுறதுதான் ஒரே தீர்வு! – ராகுல் காந்தி கருத்து!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (10:53 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதே தீர்வு என ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் மாநில அளவில் வெவ்வேறு வகையில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வீரியமடைந்துள்ள நிலையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பலர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதுதான் ஒரே தீர்வு. ஊரடங்கின்போது குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments