Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியைப் பற்றி தவறாகப் பேசிய வழக்கு – ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் !

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (14:18 IST)
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடிகள் அனைவரும் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பிய வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி மக்களிடம் கேள்வி கேட்பது போல ‘ஏன் மோடிகள் அனைவரும் திருடர்களாகவே உள்ளனர் ?. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும்.’ எனப் பேசினார்.

ராகுலின் இந்த பேச்சு பிரதமர் நரேந்திர மோடியை அவதூறு செய்யும் விதமாக உள்ளதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அடுத்தக்ட்ட விசாரணை அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கம்போடியா சென்றிருந்த ராகுல்காந்தி இன்று நாடு திரும்பியதும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments