Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுத்து நிறுத்தப்பட்ட யாத்திரை: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு..!

Siva
புதன், 24 ஜனவரி 2024 (06:49 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை யாத்திரை தொடங்கிய நிலையில் அந்த யாத்திரை அசாமில் தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல்லால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அசாம் தலைநகர் கவுஹாத்திக்கு ராகுல் காந்தி வந்து கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் போலீஸ் தடுப்புகளை அடித்து நொறுக்கியதாகவும் தெரிகிறது. 
 
போலீசார் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அசாம் முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்ததாகவும் தெரிகிறது.  இதனை அடுத்து ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்  குறிப்பாக பேசி வேணுகோபால் கன்னையா குமார் ஆகிய காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.  
 
இந்த நிலையில் மாணவர்களாக நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம், நீங்கள் விரும்பியதை செய்ய அனுமதிக்க வேண்டும், உங்களை சுதந்திரமாக சிந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments