Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓகி புயலால் நிலைகுலைந்த பகுதிகளை பார்வையிட ராகுல் காந்தி குமரிக்கு வருகை

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (09:47 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் போகும் ராகுல் காந்தி ஓகி புயலால் நிலைகுலைந்த பகுதிகளை பார்வையிட இன்று கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்.
குமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக சேதமடைந்தது. மீனவ மக்கள் பலர் தங்களின்  வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து கடும் துயரத்திற்கு ஆளானார்கள். ஓகி புயலிற்கு முன் கடலிற்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ஓகி புயலில் சிக்கி பலர் மாயமானார்கள். மத்திய மாநில அரசுகள், நடவடிக்கை எடுத்து காணாமல் போன மீனவர்கள் பலரை மீட்டனர். மீதமுள்ளவர்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு குமரிக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, மீனவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகையாக 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறினார்.
 
இந்நிலையில் இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் ராகுல் காந்தி ஓகி புயலால் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் பார்வையிட இருக்கிறார். மேலும் ‘ஒகி’ புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்தினரையும், கடலில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறவிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments