Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் குறைகளைக் கேட்க தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

Webdunia
வியாழன், 28 மே 2015 (14:02 IST)
தமிழக விவசாயிகளை சந்தித்துக் குறைகளை கேட்டறிவதற்காக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகை தர உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 

Rahul Gandhi
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பல மாநிலங்களுக்குச்  சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
 
மோடி அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம், விவசாயிகளுக்கு எதிரானது என்பது பற்றி தனது சுற்றுப்பயணத்தின் போது விவசாயிகளுடன் கலந்து பேசி வருகிறார்.
 
இந்நிலையில் அடுத்தக் கட்ட பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார். அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு அவர் தமிழகம் வருகிறார்.
 
தமிழகம் வரும் ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் மற்றும் விவசாயிகள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வருகிற 3 ஆம் தேதி தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
 
தமிழகத்திலும் விவசாயிகள் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.
 
கெயில் இந்தியா நிறுவனம் ரூ.340 கோடி மதிப்பீட்டில் கொஞ்சி, குட்டநாடு, பெங்களூர், வழியாக மங்களூர் வரை பைப் லைனில் கேஸ் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடம் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
 
ஆனால் இதற்கு அந்த பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் விவசாயிகள் கடையடைப்பு உள்பட பல கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில் தமிழகம் சுற்றுப்பயணம் வரும் ராகுல் காந்தி, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று அந்த பகுதி விவசாயிகளை சந்தித்து அவர்களது பிரச்சனைகளை நேரில் அறிய திட்டமிட்டுள்ளார்.
 
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராகுல் காந்தி விவசாயிகள் பிரச்சனைகளை கையிலெடுத்துள்ளது  காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கூட்டியுள்ளது.

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Show comments