Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம்

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2015 (09:21 IST)
பீகாரில் காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரையில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ள உள்ளார்.


 
 
243 தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனயடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 12 முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற உள்ளன.
 
ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி சேர்ந்து இந்த தேர்தலை எதிர்கொள்ள உள்ளன.
 
243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 100 இடங்களிலும், காங்கிரஸ் 40 இடங்களிலும் போட்டியிடுகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்குள்ள மேற்கு சம்பரான் மாவட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட உள்ளார்.
 
இந்த பிரச்சாரக் கூட்டத்தில்  கூட்டணி கட்சித் தலைவர்களான நித்தீஷ்குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ராகுலின் இப்பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments