Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி. பதவி இழப்புக்குப் பின் ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம்: எங்கே தெரியுமா?

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (11:54 IST)
சமீபத்தில் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் கர்நாடக மாநிலத்தில் முதல்முறையாக மாபெரும் கூட்டம் ஒன்றில் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் ஜெய்பாரத் என்ற பேரணியை ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார்.
 
வரும் ஒன்பதாம் தேதி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இந்த பேரணியை தொடக்கி வைக்க இருப்பதாகவும் தொடர்ந்து ஏப்ரல் 11ஆம் தேதி ராகுல் காந்தி வயல் நாட்டில் பிரச்சாரம் செய்ய வைப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மக்களின் குரலை ஒருபோதும் மெளனம அடையச் செய்ய முடியாது என்றும் மக்களின் குரல் இன்னும் சத்தமாக வலிமையாக ஒலிக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட பின்னர் ராகுல் காந்தி கலந்து கொள்ள முதல் பேரணி என்பதால் இந்த பேரணி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
 
edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

பிரதமர் மோடியின் கனவு: இந்திய இளைஞர்கள் சொந்த சமூக ஊடகங்களை உருவாக்க வேண்டும்!

ஒரே வாரத்தில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments