Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: ராகுல் காந்தி பேச்சு!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (08:13 IST)
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் குஜராத் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனை போட்டி மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது . ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் முயற்சித்து வருகின்றன
 
மேலும் புதிதாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை அடுத்து மூன்றாவது மாநிலமாக குஜராத் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது
 
இந்த நிலையில் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி குஜராத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் குஜராத்தில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான விழாவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் துரிதம் அடைந்தன என்று அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் காந்தி, பாஜக கூறிவரும் பொய்களில் இதுவும் ஒன்று என்றும், குஜராத் மக்களை காங்கிரஸ் கட்சி காப்பாற்றும் என்றும் நடைபெறும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான விழாவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments