Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியின் அலுவலகத்தை சூறையாடிய கும்பல்: கேரளாவில் பரபரப்பு

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (08:25 IST)
கேரளாவில் உள்ள வயநாடு என்ற பகுதியில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை மர்ம நபர்கள் சூறையாடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆனார். அதன்பிறகு அவர் வயநாடு பகுதியில் நிரந்தரமாக ஒரு அலுவலகத்தை வைத்துள்ளார் என்பதும் அந்த அலுவலகத்திற்கு அவர் அவ்வப்போது வந்து செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கேரளாவில் வயநாடு பகுதியில் உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் கட்சி அலுவலகத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மேஜை நாற்காலிகளை உடைத்து உள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது 
 
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு - காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை.. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்?

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ வழித்தடம்.. பாதுகாப்பு சான்றிதழ் சோதனை பணிகள் நிறைவு..

சென்னையின் முக்கிய சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்.. அரசாணை வெளியீடு..!

9 பேருந்து நிறுத்தங்கள்.. சைக்கிள் பாதைகள்.. புத்துயிர் பெறுகிறது மெரினா. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ.2000.. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கிடுகிடு உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments