Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றுமா 2 கோடி கையெழுத்துகள்???

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (09:40 IST)
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரட்டிய 2 கோடி கையெழுத்துகளுடன் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார் ராகுல் காந்தி. 
 
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். 29 நாட்களாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு, விவசாயிகள் பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதில் விவசாயிகள் தெளிவாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. 
 
இந்நிலையில் இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரட்டிய 2 கோடி கையெழுத்துகளுடன் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார் ராகுல் காந்தி. இந்த கையெழுத்துக்களுடன் ஆர்பாட்டம் மேற்கொண்டு பின்னர் குடியரசு தலைவரை ராகுல் காந்தி சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments