இன்று விநாயகர் சதூர்த்தி.. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

Siva
புதன், 27 ஆகஸ்ட் 2025 (09:39 IST)
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 
இதுகுறித்து பிரதமர் மோடி தனது  வாழ்த்து பதிவில்,  “பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இந்த நாளில், கணேஷ் பகவான் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்” என்று கூறியுள்ளார்.
 
அதேபோல் ராகுல் காந்தி தனது வாழ்த்து பதிவில், ‘விநாயகர் சதுர்த்தி திருநாளில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல தருணம் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி, மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஏற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments